அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவிற்கு அந்நாட்டு நீதிபதி இடைக்கால தடை விதித்து இருக்கிறார். புதிய உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டு அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிகோல்ஸ் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.