அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு யோசனைகள் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த புதன் கிழமை முதல் பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.
அத்துடன் பாதீட்டின் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பாதீட்டின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.