இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 1600 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு நாட்களுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேலும் 4150 கிலோ கிராம் மஞ்சள் காவற்துறையினரல் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.