பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 8 பேர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இன்று 17ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வாறு குளவி கொட்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை கழுகு கொட்டிய நிலையில் குளவிகள் கலைந்து தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.